Saturday, March 05, 2005

பல்லவியும் சரணமும் - பதிவு 17 - இளையராஜா ஸ்பெஷல்!

இன்னும் சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், திரைப்படத்தையும் கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!

ஓருவர் ஒரு முறை பின்னூட்டமிடும்போது, 3 அல்லது 4 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு பத்துக்கும் விடைகள் தெரிந்திருந்தாலும் கூட :-))

ஏனென்றால், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே! 2 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!

1. சந்தனக் காடிருக்கு தேன் சிந்துறக் கூடிருக்கு...
2. தென்றலிலே மிதந்து வரும் தேன் மலரே...
3. மணியின் ராகம், ஒரு வானில் தவழும் மேகம்...
4. தேன் ஆடும் முல்லை நெஞ்சில் ...
5. உறவில் கலப்பதும் பிரிவில் தவிப்பதும் ஒரே மனது ...
6. போதை கொண்டு பூ அழைக்க தேடி வந்து ...
7. ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட ...
8. கண்ணாலே நீ செய்யும் மாயங்களை இன்றும் என்றும் அறிவேன் ...
9. அன்புள்ள நெஞ்சைக் காணாதோ, ஆனந்த ராகம் பாடாதோ? ...
10. தேவதை வண்ணம் கொண்ட பூவை நீ அம்மா ...
11. என் வீட்டில் என்றும் சந்திரதோயம் நான் கண்டேன் ...
12. மெல்லினங்கள் பாடு கண்ணே, வல்லினங்கள் வாய் வலிக்கும் ...


என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!

என்றென்றும் அன்புடன்
பாலா

16 மறுமொழிகள்:

பினாத்தல் சுரேஷ் said...

சுலபமானதை முதலில் முடிக்கிறேன்!

2. தென்றலிலே மிதந்து வரும் தேன் மலரே... - காதல் ஓவியம் பாடும் காவியம் - அலைகள் ஓய்வதில்லை.

5. உறவில் கலப்பதும் பிரிவில் தவிப்பதும் ஒரே மனது ... - நானே நானா யாரோதானா - அழகே உன்னை ஆராதிக்கிறேன்.

7. ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட ... - செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் - முள்ளும் மலரும்.


சுரேஷ்.

said...

9. kARRil enthan kItham - Johnny
11. uthiri PookkaL, (uravukaL inge)

said...

5. naane naana

ROSAVASANTH said...

3. ராமனின் மோகனம்..ஜானகி மந்திரம்..
4. பருவமே! புதிய பாடல் பாடு!
7. செந்தாழம் பூவில்..
12 சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே!

ROSAVASANTH said...

11. அழகிய கண்ணே..

(செந்தாழம்பூவில்.. சுரேஷ் சொன்னதை கவனிக்காததால் இந்த ஒன்று..)

ROSAVASANTH said...

10 வான் மேகங்களே..

(மீண்டும் அழகிய கண்ணே சொல்லப்பட்டுவிட்டதை கவனிக்காததால்...)

said...

முயற்சித்த அனைவருக்கும் நன்றி!

ரோசா வசந்த்,
As usual, நல்ல form-இல் இருக்கிறீர்கள் போலும். 1,6,8 -க்கான பல்லவிகளையும் மக்களுக்கு, என் சார்பில், சொல்லி விடுங்களேன் :-) என் பதிவில் "மனைவிகளைப் பற்றி சில சங்கதிகள்! " பார்த்தீர்களா?

என்றென்றும் அன்புடன்
பாலா

said...

1. Maanae thaenae kattipudi -- udhayageetham
2.Kaadhal ooviyam paadum kaaviyam -- Alaigal Oivathillai
3. no idea.
4. paruvamae pudhiya paadal paadu -- nenjathai killathae
5. Naanae naanaa yaarao thaanaa mella mella maarinaenaa -- forgot the movie name.
6. isai maedaiyil inba vaelaiyil suga ragam pozhiyum ilamai mayakkam -- forgot the movie name
7. senthazham poovil vandhadum thendral -- mullum malarum.

enRenRum-anbudan.BALA said...

Roza vasanth,

2 (pallavis no. 1 and 8) are still pending at
பல்லவியும் சரணமும் - பதிவு 17 - இளையராஜா ஸ்பெஷல்! Still waiting for your answers:-)

---BALA

ROSAVASANTH said...

Dear Bala,.
Sorry that I didn't see you are for waiting for me. I am not sure abt the songs. It is familiar, but not coming out. In fact 6 also was familiar, now after the anonymous pointed out it si clear that 'isai medaiyil..'/ Similarly when u give the answer it will be clear. SorrY.

I will also be tarvelling from tommorow, so won't be able to see you blog till monday, bye!
anbuLLa vasanth

enRenRum-anbudan.BALA said...

Rozavasanth,

உங்களால் சொல்ல முடியவில்லை என்றால், மற்றவருக்கும் கடினமே!
நானே கூறி விடுகிறேன்.

1. நதியோரம் ... நீயும் ஒரு நாணல் என்று நூலிடை என்னிடம் சொல்ல, நான் அந்த ஆனந்தம் என் சொல்ல! (unfortunately sripriya who acts in that Rajini movie does not possess a நூலிடை :-)))
8. சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில், பெண்ணல்ல நீ எனக்கு, வண்ணக் களஞ்சியமே ... (திரைப்படம் ஞாபகமில்லை!)
என்றென்றும் அன்புடன்
பாலா

ROSAVASANTH said...

நன்றி! இப்போது ஞாபகம் வருகிறது என்றால் நம்பமுடியும் அல்லவா?

enRenRum-anbudan.BALA said...

நம்பித்தான் ஆக வேண்டும்!

இளையராஜாவின் பாடல்களில் தங்களின் பாண்டித்யம் அப்படிப்பட்டது என்று Narain சொல்லக் கேட்டிருக்கிறேன் :-)

என்றென்றும் அன்புடன்
பாலா

enRenRum-anbudan.BALA said...

Test comment ....

said...

சொர்க்கத்தின் வாசற்படி - உன்னைச் சொல்லி குற்றமில்லை

-தங்கம்

Narain Rajagopalan said...

இப்போது தான் நண்பனிடமிருந்து ஒரு 300 இளையராஜா பாடிய பாடல்களை சுட்டு கொண்டு வந்தேன். கொஞ்ச நாளில் நானும் பார்முக்கு வருகிறேன்.

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails